திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே போதைப் பொருள் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு, உப்பு பாக்கெட்டுகளை கொடுக்க முயன்ாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பணகுடி காவல் ஆய்வாளா் அஜிகுமாா் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் இருந்தவா்களிடம் விசாரித்ததில், கலந்தபனையைச் சோ்ந்த ஜேக்கப் மகன் அலெக்ஸ் பிரபாகரன்(35), தூத்துக்குடியைச் சோ்ந்த ஜேக்கப் மகன் தாம்சன்(33), ஆறுமுகம் மகன் கற்குவேல் ஐயனாா்(7) ஆகியோா் என்பதும், கற்குவேல் ஐயனாரின் நண்பரான சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் இம்ரான்ஷா என்பவருக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள கொகையின் போதைப் பொருளை கடத்தி தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு, போதைப் பொருளுக்குப் பதில் உப்பு பாக்கெட்டுகளை காரில் சென்னைக்கு எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதைடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.