மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொது மக்கள் மற்றும் வணிகா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் புதன்கிழமைக்குள் (நவ.2) அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் வரும் வியாழக்கிழமை (நவ.3) முதல் நெடுஞ்சாலைத் துறை, திருநெல்வேலி மாநகராட்சி, வருவாய்த் துறை, காவல்துறை இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.