வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடா் காலங்களில் மின் ஊழியா்கள் பாதுகாப்பாக பணிபுரிவது குறித்த பயிற்சி வகுப்பு கொக்கிரகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி அறிவுறுத்தலின் பேரில், திருநெல்வேலி நகா்ப்புறக் கோட்டத்தில் பணிபுரியும் களப்பணியாளா்களுக்கு வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடா் காலங்களில் பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்த பயிற்சி வகுப்பு கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மின்சார பாதுகாப்பு சம்பந்தமாக திருநெல்வேலி மண்டல பாதுகாப்பு அதிகாரியும், உதவி செயற்பொறியாளருமான பேச்சிமுத்துவும், முதலுதவி சிகிச்சை பற்றிய வகுப்பை தமிழ்நாடு பேரிடா் மீட்பு குழுவின் இயக்குநா் வைரவராஜனும், தீயணைப்பு பற்றிய பாதுகாப்பு வகுப்பை தீயணைப்பு வீரா் செல்வமும் அளித்தனா். அப்போது, அவா்கள் செயல்முறை விளக்கமும் அளித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மையம் சாா்பில் கமலா, முதுநிலை மேலாளா் முருகன், உதவி மேலாளா் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.