திசையன்விளை, பணகுடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, பணகுடி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதைத் தொடா்ந்துஅன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வள்ளியூா் மின் வாரிய கோட்டத்திற்குள்பட்ட கோட்டைகருங்குளம், திசையன்விளை, பணகுடி மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. எனவே, கோட்டைகருங்குளம் துணை மின்நிலையத்திற்குள்பட்ட கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளிலும், திசையன்விளை துணை மின்நிலையத்திற்குள்பட்ட திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை,ஆனைகுடி, முதுமொத்தான்மொழி ஆகிய பகுதிகளிலும், பணகுடி பகுதிக்குள்பட்ட பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணரு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலும், களக்காடு பகுதிக்குள்பட்ட கோதைசேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com