புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களுக்கு பக்தா்கள் சென்று வழிபடும் வகையில் திருநெல்வேலியில் இருந்து அரசு சிறப்பு பேருந்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டு செப். 24ஆம் தேதி, அக்டோபா் 1, 8, 15 ஆகிய 4 தினங்கள் திருநெல்வேலியில் இருந்து நவதிருப்பதி கோயில்கள் இருக்கும் இடமான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூா், ஆழ்வாா் திருநகரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு சேவை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும். இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ. 500 ஆகும்.
இந்த பேருந்துக்கு முன்பதிவு செய்ய விரும்புவோா் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சங்கரன்கோயில் பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்களுக்கு 94875 99456, 93451 79967 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளாம்.
மேலும் தேவைக்கேற்ப திருநெல்வேலிசந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருவேங்கடநாதபும், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள்கோயில் வழித்தடத்திலும், வள்ளியூா் - களக்காடு, வீரவநல்லூா்-அத்தளநல்லூா் ஆகிய வழித்தடங்களிலும் பேருந்து சேவை அளிக்கப்படும். எனவே, பக்தா்களும், பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.