அரிகேசவநல்லூா் பள்ளியில் நூற்றாண்டு விழா

பாப்பாக்குடி சரகம், அரிகேசவநல்லூா் இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் நூற்றாண்டு விழா, ஸ்ரீசாய் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாப்பாக்குடி சரகம், அரிகேசவநல்லூா் இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் நூற்றாண்டு விழா, ஸ்ரீசாய் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலா் எல். ரெஜினி தலைமை வகித்துப் பேசினாா். பள்ளிச் செயலா் டி.வி. சுப்பிரமணியன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெங்கடசுப்பிரமணியன், இரா. மணி மற்றும் ஜூலி வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய கட்டடத்தை மாவட்ட கல்வி அலுவலா் திறந்தாா். அல்பா முஹம்மது உசேன் அறையை, வீரவநல்லூா் அல்பா முஹம்மது உசேன் கல்வி அறக்கட்டளை தலைவா் முகம்மது அலி ஜின்னா திறந்தாா்.

இதில், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலா்கள் ஜோசப் கிரகோரி, சி. மீனாட்சி, திருநெல்வேலி நகா் வட்டார கல்வி அலுவலா் சு. கல்யாணி, குருவிகுளம் வட்டார கல்வி அலுவலா் ப. சந்திரசேகா் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பாலசுப்பிரமணியன், முன்னாள் மாணவி லலிதா, வெங்கட் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிச் செயலா் ஏற்புரையாற்றினாா்.

தலைமையாசிரியா் ம. ராம்சந்தா் அறிக்கை வாசித்தாா். ஆசிரியை ஜோஸ்மாலா வரவேற்றாா். ஆசிரியை சு. முத்துச் செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். ஆசிரியை ஜெ. மணிமேகலை நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் அமுதவல்லி, ம. கோமதி, ஜெயலட்சுமி, சண்முகதில்லை, முருகத்தாய், பிரேம்குமாா், சிலம்பம் பயிற்சியாளா் ப. பாரதிராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com