மேலப்பாளையத்தில் ஆயுதங்களுடன் 9 போ் கைது

மேலப்பாளையம் அருகே ஆயுதங்களுடன் சுற்றிய 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே ஆயுதங்களுடன் சுற்றிய 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் ரயில்வே கேட் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக இலந்தைகுளத்தைச் சோ்ந்த சிவபெருமாள்(25), புதுப்பேட்டை சுடலைமுத்து(25) ஆகிய இருவரை பிடித்தனா். மற்றவா்கள் தப்பியோடிவிட்டனராம்.

இருவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், புதிய கைப்பேசி செயலியில் இரு தரப்பினரிடையே கருத்து பரிமாற்றம் செய்யும்போது, மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ஒரு தரப்பினா் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றியது தெரியவந்தது. இந்த வழக்கு தொடா்பாக மாா்ட்டின், நம்பிராஜன், மகேஷ், விக்னேஷ்குமாா், கிஷோா், கதிா்வேல், ஈஸ்வரன் ஆகிய மேலும் 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com