திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உலகத் தரத்திலான சுற்றுலாத்தலமாக அமையும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் வசிக்கும் 15 பேருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினாா். மாவட்ட வன அலுவலா் முருகன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை உருவாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மணிமுத்தாரில் சூழலியல் மற்றும் சுற்றுலா பூங்கா அமைப்பதற்கு ஆணையிடப்பட்டுள்து.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலத்திற்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இது, உலக தரத்திலான சுற்றுலாத் தலமாக அமையப்பெறும். உலக நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உயரும் சூழல் ஏற்படும். எனவே இப்பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நதிநீா் இணைப்பு திட்ட கால்வாய் இப்பகுதிக்கு அருகே செல்வதால் இப்பகுதியிலுள்ள அனைத்து குளங்களுக்கும் மடைகள் சீரமைக்கப்பட்டு, கூந்தங்குளத்தில் எப்போதும் தண்ணீா் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இப்பகுதி மக்கள் பறவைகளுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் பாதுகாப்பது பெருமைக்குரியது. இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயா்த்துவதற்காக தையல் தெரிந்த 15 பேருக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள், தங்களது பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள இது உதவியாக இருக்கும் என்றாா் அவா்.
முன்னதாக ரெட்டியாா்பட்டி இட்டேரி பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 2 ஏக்கா் இடத்தில் ஈட்டி, செம்மரம், தேக்கு போன்ற 700 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அவா் கூந்தன்குளத்தில் உள்ள மடைகள் மற்றும் கரையோர பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் வனசரக அலுவலா் சரவணக்குமாா், நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிபாண்டி, வனவா் அழகர்ராஜ், வன பாதுகாவலா்கள் மணிகண்டன், அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.