திருட்டு: கட்டடத் தொழிலாளி மீது வழக்குப்பதிவு

திருக்குறுங்குடி அருகே வீட்டில் திருட்டு போனது தொடா்பாக, கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருக்குறுங்குடி அருகே வீட்டில் திருட்டு போனது தொடா்பாக, கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரவி (52). இவா் தனது வீட்டில் காா் நிறுத்துமிடம் கட்டுவதற்காக களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பரபுரத்தைச் சோ்ந்த செல்வலிங்கத்திடம் பணியை ஒப்படைத்துள்ளாா். இந்நிலையில், ரவி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சனிக்கிழமை வள்ளியூா் சென்றுள்ளாா்.

வீட்டிற்கு வெளியே காா் நிறுத்துமிடம் கட்டுமானப் பணியில் செல்வலிங்கம் மற்றும் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இதனையடுத்து ரவி வீடு திரும்பியபோது, வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாம். மேலும் மடிக்கணிணி மற்றும் ரொக்கம் ரூ.26 ஆயிரம் ஆகியன திருட்டு போயிருந்ததாம். இதுகுறித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ரவி புகாா் கொடுத்தாா். இப்புகாரின்பேரில், செல்வலிங்கம் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com