தாழையூத்தில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து காவல்நிலைய உதவி ஆய்வாளா் செல்லத்தங்கம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சங்கா் நகா்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா். அதில் அவா் கட்டுடையாா் குடியிருப்பை சோ்ந்த வினித் (23);: கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வினித்தை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.