திருக்குறுங்குடி கோயிலில் பிப். 5, 6இல் தெப்போற்சவம்

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயா் கோயிலில் தெப்போற்சவம் பிப். 5, 6 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயா் கோயிலில் தெப்போற்சவம் பிப். 5, 6 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில், நம்பி சுவாமிகள் இருந்த நம்பி, நின்ற நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளாா்.

இக்கோயிலில் 26ஆம் ஆண்டு தெப்போற்சவம் பிப். 5, 6 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. 5ஆம் தேதி அழகியநம்பிராயரும், 6ஆம் தேதி திருமலைநம்பியும் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா்.

ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஜீயா் மடத்தின் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com