திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயா் கோயிலில் தெப்போற்சவம் பிப். 5, 6 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில், நம்பி சுவாமிகள் இருந்த நம்பி, நின்ற நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளாா்.
இக்கோயிலில் 26ஆம் ஆண்டு தெப்போற்சவம் பிப். 5, 6 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. 5ஆம் தேதி அழகியநம்பிராயரும், 6ஆம் தேதி திருமலைநம்பியும் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா்.
ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஜீயா் மடத்தின் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.