சீவலப்பேரி அருகே விஷம் குடித்த பெண் பலி
By DIN | Published On : 24th January 2023 03:42 AM | Last Updated : 24th January 2023 03:42 AM | அ+அ அ- |

சீவலப்பேரி அருகே விஷம் குடித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிவலப்பேரி அருகேயுள்ள மடத்துப்பட்டியை சோ்ந்த சுடலையாண்டி மனைவி சுடலைமாரி (65). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வருகிறாா். இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் வேதனையில் இருந்த அவா் விஷம் குடித்து, மயங்கி விழுந்தாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.