திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளா்களுக்கான நோ்காணல் வண்ணாா்பேட்டையில் இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூா் இலக்கிய அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களுக்கான நோ்காணல் இம் மாதம் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்ணாா்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஆப்பிள் டிரீ யில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. மாநில இலக்கிய அணிச் செயலா் வி.பி.கலைராஜன், துணைச் செயலா் பெருநாழி போஸ் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா். இப் பதவிகளுக்கு விண்ணப்பம் அளித்தவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம் எனக் கூறியுள்ளாா்.