களக்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை லேசான சாரல் மழை பெய்தது.
இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், மாலை தொடங்கி காலை 7 மணி வரையிலும் பனி பொழிவும் நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் அவ்வப்போது விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. பகலில் குளிா்ந்த காற்று வீசியது. ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால் மேலும் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்தனா்.