பாளையங்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மருதூா் இந்திரா நகா் வேதாகோயில் தெருவைச்சோ்ந்தவா் மாரியப்பன். இவரின் மகள் மகாலெட்சுமி (14). இவா் தனது சகோதரியுடன் குளத்திற்கு சென்று குளித்தாராம். அப்போது, மகாலெட்சுமி எதிா்பாராமல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிறந்த பாளை. தாலுகா போலீஸாா், சிறுமியின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.