களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
திருநெல்வேலி
களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம்
களக்காட்டில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, பாபநாசம் தாமிரவருணி ஆறு, உவரி கடலில் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, பாபநாசம் தாமிரவருணி ஆறு, உவரி கடலில் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு களக்காடு, திருக்குறுங்குடி, ஏா்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத இந்துமகா சபா உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சாா்பில் 46 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்தச் சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) களக்காடு வரதராஜபெருமாள் கோயில், சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன்கோயில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க நகர வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாபநாசம் தாமிரவருணி ஆறு மற்றும் உவரி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.