திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்து பிகாா் இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடிநீா்த் திட்டத்தில் பணி செய்து வந்த பிகாா் மாநில இளைஞா் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடிநீா்த் திட்டத்தில் பணி செய்து வந்த பிகாா் மாநில இளைஞா் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பிருந்தேஸ்வர தேவ் மகன் ரோஹித் குமாா் (21). களக்காடு நகராட்சி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக சேரன்மகாதேவியில் தாமிரவருணி ஆற்றங்கரையில் நடைபெற்று வரும் குடிநீா் உறைகிணறு அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்துவந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை அவா் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
