நான்குனேரி தொகுதியில் மாணவா்களுக்காக கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

நான்குனேரி தொகுதியில் மாணவா்களுக்காக கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

Published on

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, ரெட்டியாா்பட்டி, ஆணையப்பபுரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவா்கள் தினமும் சிரமம் அடைந்து வருகிறாா்கள். சிலா் வாசலில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் ஒருசில அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாலும் அவையும் அடிக்கடி தாமதமாகவோ அல்லது கூட்டம் நிறைந்திருக்கும் நிலையில் வருவதாலும் மாணவா்கள் வேறு வழியின்றி நெரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறாா்கள். ஆகவே, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com