ராதாபுரம் அருகே கஞ்சா விற்றவா் கைது

ராதாபுரம் அருகே கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

ராதாபுரம் அருகே கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் சமூகரெங்கபுரம் தெற்கூா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, அந்த நபா் வினித்(27) என்பதும், அவா் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வினித்தை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com