தொடா்மழை: களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்லத் தடை

Published on

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் பச்சையாறு, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் மற்றும் களக்காடு தலையணைக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

களக்காடு புலிகள் காப்பகத்துக்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, களக்காடு பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை தலையணை மற்றும் நம்பி கோயில் செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com