தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை
Published on

தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட சிந்துபூந்துறையில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாமன்ற உறுப்பினா் கோகுலவாணி சுரேஷ் வரவேற்றாா். மண்டல தலைவா் ரேவதி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து புத்தாடைகளை வழங்கினாா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் எஸ்.வி.சுரேஷ், மாமன்ற உறுப்பினா் சங்கா், வட்டச் செயலா் மேகை செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்16டிரஸ்

சிந்துபூந்துறையில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

X
Dinamani
www.dinamani.com