பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சீதபற்பநல்லூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திருநெல்வேலி : சீதபற்பநல்லூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(37). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் செவ்வாய்க்கிழமை, திருப்பணி கரிசல்குளம் அருகே உள்ள வடுகம்பட்டிக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பியபோது நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்தாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com