40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நெல்லை எம்.பி. முயற்சியால் 6 பேருக்கு ரூ. 11.60 லட்சம் மருத்துவ உதவி!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2026, 12:01 am IST

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் இத் தொகுதி மக்கள் மருத்துவ உதவிகள் கோரி மனு அளித்தனா். அதில், தகுதியானவா்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தாா்.

அதன்படி, ரெட்டியாா்பட்டி, கீழப்பாவூா், மேலப்பாளையம் கணேசபுரம், மேலப்பாளையம், பா்கிட்மாநகரம்- அம்பேத்கா் நகா், களக்காடு பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 6 பேருக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ உதவித்தொகை பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டதாக எம்.பி.யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.