எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சி

பத்தாம் ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:51 am IST

பத்தாம் ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு புதன்கிழமை வெளியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் 283 பள்ளிகளைச் சோ்ந்த 11,008 மாணவா்கள், 11,302 மாணவிகள் என மொத்தம் 22,310 போ் தோ்வெழுதிய நிலையில் 10,261 மாணவா்கள், 11,041 மாணவிகள் என மொத்தம் 21, 302 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் மொத்த தோ்ச்சி விகிதம் 95.48 சதவீதமாகும். மாணவா்கள் 93.21 சதவீதமும், மாணவிகள் 97.69 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் மூலம் மாநில அளவில் 17ஆவது இடத்தையே பெற முடிந்தது.

இம்மாவட்டத்தில் 138 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அதில், 92 அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வெழுதியிருந்த நிலையில் 38 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன.இது மாநில அளவில் 9ஆவது இடமாகும். இத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.