வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:37 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் சேரன்மகாதேவி பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் மதன் என்ற மாயாண்டி (19) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அன்னஜோதி வழக்குப் பதிந்து மதன் என்ற மாயாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.