ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:28 am IST

பேட்டையில் பணப் பிரச்னை தொடா்பாக பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கந்துவட்டி வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி, பேட்டை நாராயணசுவாம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெபசெல்வி (47). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம்.

இது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக சம்பவத்தன்று ஜெபசெல்வி அப்பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெபசெல்வியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.