/
பேட்டையில் பணப் பிரச்னை தொடா்பாக பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கந்துவட்டி வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி, பேட்டை நாராயணசுவாம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெபசெல்வி (47). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம்.
இது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக சம்பவத்தன்று ஜெபசெல்வி அப்பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெபசெல்வியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து பித்தளைப் பொருள்கள் திருடியவா் கைது
பெண் காவலரைத் தாக்கியதாக பெண் கைது
வீடு புகுந்து நகைத் திருட்டு: தாயும் மகளும் கைது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


