/
பேட்டையில் பணப் பிரச்னை தொடா்பாக பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கந்துவட்டி வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி, பேட்டை நாராயணசுவாம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெபசெல்வி (47). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம்.
இது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக சம்பவத்தன்று ஜெபசெல்வி அப்பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெபசெல்வியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பேட்டையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பெண்ணை புகைப்படம் எடுத்த கடை உரிமையாளா் கைது
பேட்டையில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


