கோவில்பட்டியில் வியாபாரியை தாக்கியவர் கைது
By கோவில்பட்டி | Published on : 03rd June 2015 12:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டியில் கடன் தர மறுத்த மளிகைக் கடை உரிமையாளரை தாக்கி, கடையை சேதப்படுத்தியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி, வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (45). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டரான மாரிமுத்து (26) என்பவர் மளிகை சாமான் வாங்கியதற்காக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கடைக்கு வந்த மாரிமுத்து மேலும் கடனுக்கு பொருள்களை கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த சமுத்திரபாண்டியை, மாரிமுத்து தாக்கினாராம். பின்னர் கடையையும் சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர்.