பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
By ஆறுமுகனேரி | Published on : 08th June 2015 12:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆறுமுகனேரி மடத்துவிளை சந்தன சமநடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் கணிணி அறை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆறுமுகனேரி பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார் தலைமை வகித்தார். ஊர் கமிட்டித் தலைவர் அமிர்தம் பர்னான்டோ முன்னிலை வகித்தார். ராஜமன்னியபுரம் புனித அந்தோனியார் ஆலய கமிட்டி தலைவர் சந்தானம், ஆசிரியை லூசியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பங்கு தந்தை ஸ்டார்வின் அடிகளார் கட்டடங்களை அர்ச்சித்தார். அருள்சகோதரி புஷ்பம் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியை அருள்சகோதரி மலர் நன்றி கூறினார்.