• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி

ஆர்ப்பாட்டக் களமாக மாறிய ஆட்சியர் அலுவலகம்

By dn  |   Published on : 23rd June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஆர்ப்பாட்டக் களம் போல ஆட்சியர் அலுவலகம் காட்சியளித்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் மிகவும் சிரமமடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி முதியவர் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் ஆர்ப்பாட்டக் களமாகவே காட்சியளித்தது.

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்: தூத்துக்குடி அருகேயுள்ள தட்டபாறை காவல் நிலையத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைத்து, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல் ஆய்வாளர் செல்வம் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலையும், ரூ. 20 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தேவேந்திரர் உரிமைக்கான பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை ஊழியர்கள் நூதனப் போராட்டம்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினக்கூலி பணியாளர்களாக பணிபுயும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2000ஆம் ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த தங்களுக்கு இதுவரை பணி நிரத்தரம் செய்யப்படவில்லை என்றும், கடந்த 10 மாத காலமாக ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும் கூறிய அவர்கள் ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருவதால் மண் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் குணசீலன் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள ஆங்கிலேயர் ஆஷ் துரை நினைவிடத்தில் மரியாதை செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஆஷ் நினைவிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் எழுச்சி பேரவையினரும் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்