தூத்துக்குடியில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு

தூத்துக்குடியில் மூன்று சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் மூன்று சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் எம்பவர் சமூக சேவை அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் தலைமை வகித்தார்.

விழாவையொட்டி மூன்று சிறப்பு அஞ்சல் தலைகளை தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம் வெளியிட்டு பேசினார்.

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் அருள்பிரகாஷ், எம்பவர் பொருளாளர் பாலகிருஷ்ணன், சம்பத் சந்திரபாலன் ஆகியோர் சிறப்பு அஞ்சல் தலைகளை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், எம்பவர் திட்ட இயக்குநர் மீரா சங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர் கணேசன், பணியாளர்கள் லலிதாம்பிகை, தீபக், ஹெப்சி, மலர், ஆனந்தி, கோல்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com