உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், இந்திய மருத்துவ சங்கமும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன நிர்வாகத் தலைவர் பரேஷ் கஜ்ஜார், பொது மேலாளர் குமரவேந்தன், மருத்துவர் செந்தில் ஆகியோர் ரத்த தானம் செய்து தொடங்கிவைத்தனர்.
இந்நிறுவனத்தில் பணியாற்றும் 65 பணியாளர்கள் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் கைலாசம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி, இந்திய மருத்துவ சங்கச் செயலர் அருள் பிரகாஷ், தலைவர் குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.