ஆத்தூர் வடக்கு ரதவீதி ஸ்ரீ நல்ல பிள்ளையார் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து நல்லபிள்ளையார், ஸ்ரீகிருஷ்ணர் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் சுவாமி சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை நல்ல பிள்ளையார் கைங்கர்ய சபை குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.