டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

திருச்செந்தூர்  இந்து தொடக்கப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர்  இந்து தொடக்கப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
 பள்ளிச்  செயலர் சு.ராஜமாதங்கன் தலைமை வகித்தார்.  பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியை திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரா.மனோரஞ்சிதம்  தொடங்கிவைத்தார். தொடர்ந்து யோகாப்போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களான செ.ஸ்ரீராம், எம்.ஆர்.நயினார் கல்யாண் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அரங்கநாதன், சுவாமிநாதன், நடராஜன், அமல்ராஜ், சங்கரகோமதி, கல்யாணி, பா.ஜ.க. மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஆசிரியை மு.சங்கரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com