குளத்தூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குளத்தூர் டி.எம்.எம். கலை அறிவியல் கல்லூரி மாணவர்,  மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குளத்தூர் டி.எம்.எம். கலை அறிவியல் கல்லூரி மாணவர்,  மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்க நகரத் தலைவர் ஜாய்சன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பிரபு,  ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்,  மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
போராட்டத்தில் கல்லூரி மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் கஸ்பர்,  கனகராஜ்,  முருகபெருமாள், அசோக்ராஜா,  மாரிமுத்து,  முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com