எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்ததில்  கரூரைச் சேர்ந்த தந்தை-மகள் சாவு

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி நான்குவழிச் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கரூரைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி நான்குவழிச் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கரூரைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 
கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). இவர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி விஜயலட்சுமி(42) மற்றும் மகள்கள் வானதி (19), கமலி (14) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு கரூரிலிருந்து புறப்பட்டு, திருச்செந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை அடுத்துள்ள தாப்பாத்தி அருகே நான்குவழிச் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் எதிர்திசைக்குச் சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இதில் காரை ஓட்டி வந்த ராஜேந்திரன், அவரது மகள் வானதி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் காரில் பயணித்த விஜயலட்சுமி, கமலி இருவரும் பலத்த காயமடைந்தனர். 
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பாக, மாசார்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com