உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி 108 திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி, காலை 6 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நன்கு மழை பெய்து நாடு வளம் பெற வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் உள்பிரகார சப்பர பவனி மற்றும் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பி. சுந்தரஈசன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.