தமிழ்நாடு மக்கள்நலன் காக்கும் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.
அமைப்பின் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் முகைதீன், மாநில இணைச் செயலர் மனோகரன், மாநிலச் செயலர் மகாராஜன், மாநில நிர்வாகிகள் ஜெயசெல்வகுமார், மைனர்முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முகம்மது முகைதீன் வரவேற்றார். விவசாயத் தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்கு டி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், வற்றாத ஜீவநதியான தாமிரவருணியை பாதுகாக்க வேண்டும், மரங்க ளின் மேல் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நோவா நன்றி கூறினார்.