கயத்தாறு அருகே திங்கள்கிழமை இடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கயத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கயத்தாறையடுத்த பனிக்கர்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலையில் இடி, மின்னல் தாக்கியதில் கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருந்து வந்த காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தினால் இறக்கைகள் மற்றும் மேல்பகுதியில் உள்ள சில சாதனங்களும் தீயில் கருகி நாசமாயின. இதுகுறித்து கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.