சீர்காட்சி கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி அருகே சீர்காட்சி அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி அருகே சீர்காட்சி அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு மகாகணபதி, சக்தி, சுதர்சன, நவக்கிரக ஹோமம்,  10 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 11 மணிக்கு மகா அபிஷேகம்,12 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம்,  சிறப்பு தீபாராதனை  நடைபெற்றது.
பகல் 1 மணிக்கு மகேஷ்வர பூஜை, அன்னதானம், 3 மணிக்கு சுவாமி நகர்வலம் வருதல்,  மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஏழாயிரம்பண்ணை எட்டாம் கூட்ட பெருமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com