கோவில்பட்டியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீஸார் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பால்பாண்டியன் பேட்டையில் மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பையூரணி கடலையூர் சாலை பழந்தோட்ட நகரைச் சேர்ந்த சேசுதாஸ் மகன் ஆரோக்கியராஜை (47) கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.