கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் மகேந்திரமணி தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொறுப்பாளர்கள் கந்தசாமி, சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில்,  "பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2017  முதல் வழங்கப்பட வேண்டிய மருத்துவப்படி ரூ. 2,000 வழங்க வேண்டும்; பணி ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்;   பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர் சங்க உதவிச் செயலர் காளியப்பன், அமைப்புச் செயலர் மோகன், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்பட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். 
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைக்க,  ஓய்வூதியர் சங்கச் செயலர் முத்துராமலிங்கம் அதை  முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com