இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர் மரியாதை

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தில்

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இம்மானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இதில்,  மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூரியராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தாமோதரக்கண்ணன், கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமையில்,  மாநில துணைப் பொதுச்செயலர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில்,  வடக்கு மாவட்டச் செயலர் பாஸ்கர், நாம் தமிழர் கட்சியினர் கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை செயலர் பாலசுப்பிரமணியன்,  தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பாரத்குமார்,  வடக்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் காளீஸ்வரன்,   தமாகா இளைஞரணி மாவட்டத் தலைவர் கனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com