கோவில்பட்டி, திருச்செந்தூரில் அண்ணா பிறந்த நாள்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலை, உருவப் படத்துக்கு அதிமுக மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலை, உருவப் படத்துக்கு அதிமுக மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய திமுக அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சோழபெருமாள் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்: திமுக சார்பில் திருச்செந்தூர் அமலி நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலர் ஏ.பி.ரமேஸ், நகர பொறுப்பாளர் சுடலை, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜபாண்டி, ஜெபராஜ், ஜெரால்டு, வேலம்மாள், சாத்ராக், பள்ளிப்பத்து ரவி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் கோமதி, நகர மகளிரணி அமைப்பாளர் க.இசக்கியம்மாள், இசக்கிதங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் செ.வெற்றிவேல், நகர தொண்டரணி அமைப்பாளர் மணி ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com