மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பிள்ளையார்நத்தம்: விளை நிலத்தில் திடீர் தீ

கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் விளை நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:01 am IST

கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் விளை நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
ஞாயிற்றுக்கிழமை வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், சோளம், ஊடுபயிராக பருத்தி ஆகியவை பயிரிட்டிருந்தனர்.  இதனிடையே, சனிக்கிழமை மாலையில் பிள்ளையார்நத்தத்தில் உள்ள நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம்.  கோவில்பட்டி தீயணைப்புபடையினர் வந்து தீயை அணைத்தனர். இதில், பல ஏக்கர் நிலத்தில் விளை பொருள்கள் தீயில் கருகின. தகவலறிந்த கோட்டாட்சியர் விஜயா தலைமையில் வட்டாட்சியர் பரமசிவன், அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் தலைமையில், மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தீ விபத்தில் பாதிப்பு இல்லை. மக்காச்சோளம் அறுவடை செய்த வயலில் சருகுகள்தான் தீயில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.