சாத்தான் குளம் தட்டார் மேலத் தெரு அருள்மிகு ஸ்ரீகருப்பசுவாமி கோயிலில் ஏப். 17ஆம் தேதி மகா கும்பா பிஷேகம் நடை பெறுகிறது.
இதையொட்டி, கோயிலில் திங்கள்கிழமை (ஏப். 15) காலை 7 மணிக்கு அனுக்ஞையுடன் வழிபாடுகள் தொடங்கி யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை அடுத்த நாள்களில் நடைபெறும்.
புதன்கிழமை (ஏப்.17) காலை 5 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கி கடம் எழுந்தருளுதலுக்குப் பின், காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் மூலஸ்தான மூர்த்தி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அலங்கார தீபாராதனையும், 12.30-க்கு அன்னதானமும் நடைபெறும்.