கோவில்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மகாவீரர் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சாராப் ஜெயின் அறக்கட்டளைத் தலைவர் முகேஷ் ஜெயின் தலைமை வகித்தார். ஸ்ரீ 1008 கழுகுமலை பகவான் மகாவீரர் ஷேத்திர கமிட்டிச் செயலர் ரித்திக் ஜெயின், பிரேமேஸ் ஜெயின், விஜயகுமார்சோமானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிங்கள் ஜெயின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஆசிரியை ஷீபாராணி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முத்துமாரியப்பன், ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் தேன்ராஜா வரவேற்றார். பொறுப்பாளர் சேர்மராஜன் நன்றி கூறினார்.