கோவில்பட்டியில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து பாஜக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பாஜக வடக்கு மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில் அக்ட்சியினர், இளைஞர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கூட்டணிக் கட்சியினர் சார்பில், கட்சியின் தேர்தல் அலுவலகம் முன்பிருந்து மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது.
பேரணி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டு பகுதிகளுக்கும் வீதிவீதியாக சென்றது. பேரணியில் பங்கேற்றோர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.