பெண்ணை தீயில் தள்ளியதாக அவரது சகோதரர் மற்றும் தாயார் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு கீழத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி விஜயலட்சுமி (48). இவர், தனது சகோதரியின் திருமணத்துக்காக, தனது 5 பவுன் நகையை தாயார் மணியம்மாளிடம் ஏற்கெனவே வழங்கியிருந்தாராம். தற்போது அந்த நகையை திரும்ப கேட்டதால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விஜயலட்சுமி தாயார் வீட்டுக்கு வந்த போது, அவரது தாயார் மணியம்மாள், சகோதரர் ஜெயசந்திரசேகர் இருவரும் சேர்ந்து, அங்கு குவிந்து கிடந்த குப்பையில் தீவைத்து, அதில் விஜயலட்சுமியை தள்ளினராம். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.