சிறைத் துறையில் துப்புரவுப் பணி: மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்ட கிளைச் சிறைகளில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் பணிக்கு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட கிளைச் சிறைகளில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் பணிக்கு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சி. கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாளையங்கோட்டை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி மாவட்ட சிறை, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தலா ஒரு துப்புரவுப் பணியாளர் பணியிடம் என, 4 முன்னுரிமை அல்லாத பணியிடங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பு இதர வகுப்பினர் 18 - 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 - 32 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 18 - 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தகுதியானோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் சாதிச் சான்று, ஆதார் அட்டை நகல்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் விவரங்களுடன், கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய சிறை, பாளையங்கோட்டை- 627 002' என்ற முகவரிக்கு மே 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com