சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற  பணிப் புறக்கணிப்பு

பிறப்பு, இறப்பு சான்றுகள் சம்பந்தமான வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும்

பிறப்பு, இறப்பு சான்றுகள் சம்பந்தமான வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை  வெள்ளிக்கிழமை புறக்கணித்தனர். 
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, சாத்தான்குளம் நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறப்பணிப்பதாக அறிவித்தனர். எனினும், இரு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர்.  அவர்கள் மீது நீதிபதி சரவணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மற்ற   38 வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com